டுபாயில் கோர விபத்து : 17 பலி

டுபாயில் நேற்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்து ஒன்றில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரமழான் கொண்டாட்டத்திற்காக ஓமன் நாட்டின் தலைநகரம் மஸ்கட்டிற்கு சென்று விட்டு, டுபாய் நோக்கி 31 பயணிகள் பஸ் ஒன்றில் நேற்று மாலை 6 மணியளவில் திரும்பிக்கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

டுபாய் ராசிதியா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது திடீரென மோதி குறித்த பஸ் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டு டுபாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதேவேளை, சிகிச்சை பெற்று வரும், 5 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!