மோடியின் வருகை வடக்கு – கிழக்கு இணைப்பின் ஆரம்பமாக அமைய வேண்டும் – சுரேஷ்

இந்திய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திட மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் இந்நிலையில், வடக்கு கிழக்கின் இணைப்பு தொடர்பில் எடுத்துரைத்து தமிழர்களின் தாயகமான வடக்கு – கிழக்கு இணைப்புக்கு தொடக்கப் புள்ளியாக இந்த சந்திப்பு அமைய வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசம் முஸ்லின் அடிப்படைவாதிகளின் தளமாக இருக்கக் கூடாது. அவ்வாறான நிலைமை உருவானால் அது இலங்கைக்கு மட்டுமல்ல நட்பு நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் எனவே வடக்கு கிழக்கு இணைந்து இருப்பதே அவசியமாகும் இதனை இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடித்துரைக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் கட்டப் பிராயில் உள்ள அவரது இல்லத்தின் இன்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதை தெரிவித்தார்.

இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. சில முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்களின் தாக்குதல்களினால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலையில் இந்திய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திட மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.அவர் ஜனாதிபதி,பிரதமர்,கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

நாட்டில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருனந்தாக கூறப்படுகின்றது.மேலும் இந்தியாவில் பயிற்சி பெற்ற அமைப்பினர் சிலரும் இதில் தொடர்புப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது. இந்த தாக்குதல் சம்பவங்களின் பின்னர் சர்வதேச பயங்கரவாத தீவிரவாதத்தை ஒழிக்க நட்பு நாடு என்ற ரீதியில் சகல உதவிகளையும் வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றால் அது இந்தியாவிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும்.குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களின் பாதுகாப்பு முக்கியத்துவமாகவுள்ளது. எனவே இலங்கையின் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது அத்தியாவசியமாக காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் அதன் முக்கியத்துடன் என்ன?என்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்திய பிரதமருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இலங்கை அரசு வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி அக்கறை கொள்ளாது அதனை தடுக்கும் பல பணிகளை செய்கின்றது.குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளை இணைக்கும் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. இதனை எமது தமிழ் தலைமைகளும் தடுக்காது வருகின்றனர். எனவே இந்தியாவிடம் வடக்கு கிழக்கின் இணைப்பு தொடர்பில் எடுத்துரைத்து தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு இணைப்புக்கு தொடக்கப் புள்ளியாக இந்த சந்திப்பு அமைய வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!