தீவிரவாத முறியடிப்புக்கு ஜப்பானும் உதவுவதாக வாக்குறுதி

சிறிலங்காவுக்கு தீவிரவாத முறியடிப்புக்கான கருவிகள் மற்றும் பயிற்சி உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜப்பானின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ரொஷிகோ அபே, நேற்று அலரி மாளிகையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசினார்.

இதன்போது, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே, ஜப்பான் இந்த உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளின் கடலோரக் காவல் படைகளுக்கிடையிலான ஒத்துழைப்புக் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!