புத்தர் சிலைகளை நாமே அகற்றுவோம்!- என்கிறார் ரத்தன தேரர்

இந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பாவிட்டால், அதற்காக நீதிமன்றமோ, பொலிஸ் நிலையமோ செல்ல வேண்டியதில்லை. இவ்வாறான சூழலில் புத்தர் சிலையை நாங்களே அகற்றுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தனதேரர் தெரிவித்துள்ளார்.

இந்து பௌத்த கலாசார பேரவையில் 2ஆம் மொழி கல்வியை நிறைவு செய்த மாணவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இலங்கை வேந்தன் கலைக் கல்லுாாியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் கற்பிக்கப்படுகிறது. அதேபோல் கொழும்பில் சிங்கள மாணவா்களுக்கு தமிழ் கற்பிக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது.

இந்து சமயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இங்கே இந்து ஆலயங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் மக்கள் விரும்பாவிட்டால் அதனை நாங்கள் செய்யமாட்டோம். அதற்காக நீதிமன்றம் செல்லத் தேவையில்லை. இந்து பௌத்த சமயங்களின் செய்தி அன்பு மட்டுமேயாகும். தலதா மாளிகை தாக்கப்பட்டபோது இந்து கோவில்களை பௌத்தர்கள் தாக்கவில்லை. 83 கலவரம் நடைபெற்ற காலத்திலும் கூட இந்துக் கோவில்களை தாக்கவில்லை. தாக்கவேண்டும் என நாங்கள் நினைக்கவுமில்லை. இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் பலமான அமைப்பை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!