வாங்கிய பணத்தை தராததால் பெண்ணை நடுரோட்டில் போட்டு உதைத்த கும்பல் !

பஞ்சாப் மாநிலம் முக்த்ஸர் எனுமிடத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ராகேஷ் சவுத்திரியின் தம்பி ஒரு பெண்ணை அடித்து உதைத்த காட்சி வீடியோவில் பதிவாகி வைரலாகியுள்ளது. கடனாக வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காத பெண்ணை தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து கவுன்சிலரின் தம்பி தாக்கியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், 6 பேரை கைது செய்துள்ளனர். காயம் அடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!