அஸ்கிரிய மகாநாயக்கர் சமலுக்கு ஆதரவு!

நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமானால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற பொசன் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஞானரத்ன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் செயற்பாடுகள் அனைத்தும் பின்னடைவிலேயே காணப்படுகின்றன. ஆகையால் வினைத்திறனான ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். அந்தவகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்தது. அது உண்மையில் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும் எனவும் ஸ்ரீ ஞானரத்ன தேரர் கூறியுள்ளார்.

இதேவேவேளை எமது நாடு ஐக்கிய தேசிய கட்சியினாலேயே மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!