கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ போர்க்கப்பல்

இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ என்ற போர்க்கப்பல் நேற்று நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பலுக்கு, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

146 மீற்றர் நீளமும், 4,560 தொன் எடையும் கொண்ட ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ போர்க்கப்பலில் 273 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

மூன்று நாட்கள் கொழும்பில் தங்கியிருக்கும் போது, இந்தப் போர்க்கப்பலில் வந்துள்ள இந்திய கடற்படையினர், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

இந்திய போர்க்கப்பல், ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ நாளை கொழும்பு துறைமுகத்தை விட்டுப் புறப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!