இராணுவத் தளபதியை தடுக்கிறது மஹிந்த அணி!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகி சாட்சியம் வழங்கவேண்டாம் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவிடம் மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமரையும் அமைச்சர்களையும் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் பாதுகாக்கும் நோக்குடன் தெரிவுக்குழு செயற்படுகின்றது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வீட்டுக்கு அனுப்பிவைக்கும் வகையிலேயே பாதுகாப்பு அதிகாரிகளை சாட்சியம் வழங்க அழைத்து, ஜனாதிபதிக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறவைக்க இந்தத் தெரிவுக்குழு முயற்சிக்கின்றது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!