தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசா இன்று குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று சிறிலங்கா வரவுள்ளார்.
அதிகாரபூர்வ வெளியாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிது நேரம் தரித்துச் செல்லவுள்ளார்.
தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசாவை கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளார்.
இரு தலைவர்களும் குறுகிய நேரப் பேச்சுக்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!