வெடி குண்டு மிரட்டல்- லண்டனில் அவசரமாக தரையிறங்கியது இந்திய விமானம்

எயார் இந்தியாவிற்கு சொந்தமான விமானமொன்று சற்றுமுன்னர் வெடி குண்டு மிரட்டல் காரணமாக லண்டனில் அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பாயிலிருந்து அமெரிக்கா சென்றுகொண்டிருந்த ஏஎல் 191 என்ற விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டனில் தரையிறங்கியுள்ளது என எயர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் போர்விமானங்களிற்கு அதிவேகத்தில் பயணம் செய்து எயர் இந்திய விமானத்தை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக பிரிட்டிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட விமானம் தனியான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!