கோவில்களில் ஆரத்தி தட்டில் பக்தர்கள் இடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது – கர்நாடக அரசு உத்தரவு!

கர்நாடக மாநில கோவில்களில் ஆரத்தி தட்டில் பக்தர்கள் இடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகின்றன. கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் அர்ச்சகர்களுக்கு 6-வது ஊதிய குழு அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் பல சலுகைகள் வழங்கும் வகையில் மாநில அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் பக்தர்கள் ஆரத்தி தட்டில் போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது என்றும் கோயில் வருமானத்தில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!