வேறொருவருடன் மனைவிக்கு இருந்த தகாத உறவு: மனைவி, இரு பிள்­ளைகள் உள்­ள­டங்­க­லாக 9 பேரை சுட்டு கொன்று எரித்த கணவன்

தனது மனை­விக்கு இர­க­சிய காதல் தொடர்பு இருப்­ப­தாக சந்­தேகித்த கணவர் ஒருவர் தனது மனை­வி­யையும் இரு பிள்­ளை­க­ளையும் தனது மனை­வியின் குடும்ப உறுப்­பி­னர்கள் 6 பேரை யும் சுட்டுக்கொன்ற பின்னர் மனை­வியின் குடும்­பத்­தி­னரின் வீட்­டிற்கு தீ வைத்து அந்தச் சட­லங்­களை எரித்த அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் பாகிஸ்­தானில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

சவூதி அரே­பி­யாவில் பணி­யாற்றி வந்த முஹமட் அஜ்மால் என்ற மேற்­படி நபர், தனது மனைவி வேறொரு நப­ருடன் இருப்­பதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டத்தைப் பார்த்து மனை­விக்கு அந்த நப­ருடன் இர­க­சியக் காதல் தொடர்பு இருப்­ப­தாகச் சந்­தே­கித்து சின­ம­டைந்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் 25 நாட்­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து தாய்­நாடு திரும்­பிய அவர் இந்தப் படு­கொ­லை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக மாவட்ட பொலிஸ் அதி­கா­ரி­யான இம்ரான் மெஹ்மூத் கூறினார்.

தான் குடும்ப கௌர­வத்­துக்­காக படு­கொ­லை­களை மேற்­கொண்­ட­தாக அஜ்மால் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

அவர் இதன்­போது தனது மனைவி, இரு பிள்­ளை­க­ளுடன் மனை­வியின் சகோ­த­ரி­க­ளான தனது 3 மைத்­து­னிகள், அவர்­க­ளு­டைய இரு பிள்­ளைகள் மற்றும் மாமியார் ஆகி­யோரைத் துப்­பாக்­கியால் சுட்டுக்கொன்­றுள்ளார்.

இந்தப் படு­கொ­லைகள் இடம்­பெற்ற போது அஜ்­மா­லுடன் இருந்த அவ­ரது தந்­தையும் கைது­செய்­யப்­பட்­டுள்ளார். அத்­துடன் மேற்­படி படு­கொ­லை­களுடன் தொடர்பைக் கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் அஜ்மாலின் சகோதரரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!