தொலைக்காட்சி விவாதங்களில் இனி பா.ஜனதா பங்கேற்காது – தமிழிசை சவுந்தரராஜன்!

தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும், கருத்துகளையும் மக்களிடம் எடுத்துச்செல்வதற்கு மிகவும் பயன் அளிப்பதாக உள்ளது.

ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்போது பா.ஜ.க. சார்பில் பிரதிநிதிகள் யாரும் விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!