பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள தர்பேலா பகுதியில் ஆறு ஒன்றில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் பழியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் தோர்கார் மாவட்டத்தின் நல அமேஜை கிராமத்தில் உள்ள 80 பேரே இவ்வாறு படகில் பயனித்துள்ளனர்.
குறித்த பொதுமக்கள் ஹரிப்பூர் நோக்கி சென்றபொழுது திடீரென படகு நடுவழியில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது.
இவ்வாறு குறித்த படகில் பயனித்த பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
எனினும் அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் நீரில் மூழ்கிய மற்றவர்களை மீட்டுள்ளதோடு , உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!