இலங்கை தமிழர் விவகாரத்தில் கருத்து- வைகோவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நீதிமன்றம் தேசத்துரோக வழக்கில் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

2009 இல் சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு பேசி வைகோ இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசும் திமுகவுமே காரணம் என கருத்து வெளியிட்டிருந்தார்.

அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கையும் வைகோ கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனை காரணம் காட்டி வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியிருப்பதாக தெரிவித்து திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கிலேயே நீதிபதி இன்று வைகோ தேசத்துரோக குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!