வேட்பாளரை அறிவிக்குமாறு மஹிந்தவுக்கு அழுத்தம்!

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உடனடியாக தீர்மானம் எடுக்கவேண்டும் என்று நாங்கள் அழுத்தம் கொடுப்போம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரதான கட்சிகள் மெளனம் காத்து வருகின்றன. இது அவர்களுக்கிடையில் திரைமறைவில் தேர்தலை பிற்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்றும் அவர், கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!