பூஜித, ஹேமசிறி ஆகியோரின் பிணைக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளார் சட்டமா அதிபர்

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில்,பிணை வழங்கியமைக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!