வழிக்கு வந்தார் தயாசிறி – தெரிவுக்குழு முன் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று பிற்பகல் கூடிய போது, முதல் சாட்சியாளராக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆஜரானார்.

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தெரண தொலைக்காட்சியில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத்துக்களை தெரிவித்திருந்தார். அது தொடர்பிலேயே அவர் சாட்சியம் வழங்குவதற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!