ஜனாதிபதியின் தவறுகளை சுட்டிக்காட்ட நாம் முன்வரும் போது எமது வாயை மூடுவதற்கு முயற்சி : ஹிருணிகா

ஜனாதிபதியின் தவறுகளை சுட்டிக்காட்ட நாம் முன்வரும் வேளையில் எமது வாயை மூடுவதற்கு முயற்சிகள் எடுக்கபடுகின்றது.

இதனால் எமது உயிர் தொடர்பாக நம்பிக்கை கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிப்பெறச் செய்வதற்காக குரல்கொடுத்த அதே வாய் இனி அவரை தோற்கடிப்பதற்காக குரல் கொடுக்குமெனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிச்சனையை ஒன்றினை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!