நிலை தடுமாறிய விமானம் : 35 பயணிகள் காயம்

கனடா விமானம் ஒன்று வான்குவரில் இருந்து சிட்னி நகருக்கு பயனமானபோது சீரற்ற காலநிலை காரணமாக விமானம் நிலைதடுமாறியதில் பயணிகள் காயமடைந்தனர்.

சுமார் 284 பேர் வரை பயணித்துக்கொண்டிருந்த போயிங் 777-200 ஜெட் என்ற விமானத்திலேயே இந்த பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக வான்கூர் சர்வதேச விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கப்பட்டதுடன், காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையில் விமானம் நிலை தடுமாறியதில் 35 பயனிகள் காயங்களுக்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!