ஹொங்கொங்கின் யேன் லோங் பிராந்தியத்திலுள்ள புகையிரத நிலையத்துக்குள் முகமூடியணிந்த குழுவொன்று கம்புகள் மற்றும் பொல்லுகளுடன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரவேசித்து தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 45 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை ரீசேர்ட் அணிந்திருந்த அந்தக் குழுவினர் புகையிரத நிலைய மேடையி லும் தரித்திருந்த புகையிரதங்களுக்குள்ளும் பிரவேசித்து அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் அந்தப் பிராந்தியத்தில் பெரும் பதற்றநிலையை உருவாக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஹொங்கொங்கில் இடம்பெற்ற பிந்திய ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்ட ஊர்வல த்தை பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் இறப்பர் குண்டுப் பிரயோகங்களை மேற்கொண்டு கலைத்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புகையிரத நிலையத்தில் தாக்குதல் நடத்திய கும்பல் யார் என்பது கண்டறியப்பட வில்லை.
சட்டத்தின் ஆட்சி நடைமுறையிலுள்ள ஹொங்கொங்கில் இத்தகைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளமை முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றெனவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹொங்கொங் பிராந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் ஷியுங் வான் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலொன்றுக்கு சில மணித்தியாலங்கள் கழித்து அந்நாட்டு நேரப்படி இரவு 10.30 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்ற ஆர்ப் பாட்ட ஊர்வலத்தின்போது ஆர்ப்பாட்டக் காரர்கள் அரசாங்க அலுவலகங்கள் பல வும் அமைந்துள்ள சென்ரல் பிராந்தியத்தை நோக்கிச் செல்ல முற்பட்டவேளை அவர்களை வான் செயி எனும் இடத்தில் எதிர்கொண்ட பொலிஸார் அவர்களைக் கலைக் கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே மேற்படி மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது சுமார் 4இ000 பொலிஸார் அந்தப் பிராந்தியத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகி றது.
ஹொங்கொங் தலைவர் காரி லாம் மக்க ளின் கோரிக்கைக்கு காதை செவிடாக வைத்திருப்பதை நிறுத்த வேண்டும் என குடியியல் மனித உரிமைகள் முன்னணியைச் சேர்ந்த பொன்னி லியுங் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் 430இ000 பேர் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்ற அதேசமயம் அந்த ஊர்வலத்தில் 138இ000 வரையானவர்களே பங்கேற்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘அமைதியான ஊர்வலங்களால் பயனில்லை என்பதை எமக்குக் கற்றுத்தந்துள்ளீர்கள்’ என்பது உள்ளடங்கலான சுலோகங்களை ஹொங்கொங்கிலுள்ள சீன மத்திய அரசாங்கக் கட்டிடமான தொடர்பு அலுவலகத்தின் சுவர்களில் எழுதியதுடன் பொலிஸ் நிலையமொன்றுக்கு வெளியிலுள்ள சி.சி.ரி.வி. கண்காணிப்பு காணொளிப் படக்கருவிகளில் வர்ணப்பூச்சை விசிறிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின்போது ஆர்ப்பாட்ட துண்டுப் பிரசுரங்களுடன் பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்டவர் களை விசாரணைக்காக சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு அனுப்பும் சட்டமூலமொன் றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் அந்த சட்டமூலம் இரத் துச் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜன நாயக சீர்திருத்தத்தை முன்னெடுக்க வலியு றுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!