நாய்களுக்கு பயந்து ஒளிந்த நபர்; திருடன் என தவறாக எண்ணி எரித்து கொலை!

உத்தர பிரதேசத்தின் பாராபங்கி நகரில் ரகோபூர் கிராமத்தில் சுஜித் குமார் நடந்து சென்றுள்ளார். அவரை தெருவில் இருந்த சில நாய்கள் துரத்தவே வீடு ஒன்றில் சென்று ஒளிந்து கொண்டுள்ளார். ஆனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை திருடன் என நினைத்து உள்ளனர். இதனால் அவர்கள் சத்தம் போட்டுள்ளனர். அருகிலுள்ளவர்கள் திரண்டு வந்து அவரை அடித்து, தாக்கியுள்ளனர். இதன்பின் அவர் மீது தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தீக்காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வீட்டில் வசித்து வந்த 5 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!