தகவல் கொடுத்த சாரதிக்கு 50 இலட்சம்!

சாய்ந்தமருது பகுதியில் சஹ்ரான் குழுவினரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய வாகனச் சாரதிக்கு 50 இலட்சம் ரூபாய் பணப்பாிசை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கான பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இவர் வழங்கிய தகவலுக்கு அமைய சாய்ந்தமருது பகுதியில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!