மெக்ஸிக்கோவின் தமோலிபாஸ் பிராந்தியத்திலிருந்த றியோ கிரான்ட் ஆற்றைக் கடந்து அமெரிக்காவில் பிரவேசிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணொருவர் தனது கணவர் மற்றும் இரு சின்னஞ்சிறு மகன்மார் முன்னிலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மேற்படி நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி அந்தப் பிராந்திய கடற்கரையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காணொளிக் கருவிகளில் பதிவாகியுள்ளது.
சம்பவ தினம் சிறுவர்கள் உள்ளடங்கலாக சுமார் 30 பேர் அந்த ஆற்றைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதே இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தனது தாய் ஆற்றில் அடித்துச் செல்வதைக் கண்ட அவரது மகன்மாரில் ஒரு சிறுவன் ஆற்றில் தன்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த தந்தையின் கழுத்தை கட்டிப் பிடித்தவாறு அம்மா, அம்மா என கதறி அழுவது காணொளிக் காட்சியில் படமாகியுள்ளது.
இந்நிலையில் மெக்ஸிக்கோ படையினரால் குறிப்பிட்ட தந்தை, இரு மகன்மார் உள்ளடங்கலாக அனைத்துக் குடியேற்றவாசிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!