எந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் என்பது முக்கியமல்ல. நாட்டின் எதிர்கால நலன் கருதி யார் சிறந்த கொள்கைத்திட்டங்களுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார்களோ அவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நாட்டிற்கான சிறந்த வேலைத்திட்டங்களுடன் எமது வேட்பாளரை அறிவிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும். இந்த முறைமை தொடருமே ஆனால் இனிவரும் காலங்களில் யார் ஜனாதிபதியானாலும் பிரதமரானாலும், அவர்களுக்கிடையில் எப்போதும் முரண்பாடுகள் ஏற்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!