பூந்தோட்டத்தை விரும்பாத வெளிநாட்டு அகதிகள்!

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் மேலும் தொகுதியினர் நீர்கொழும்பிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக புனர்வாழ்வு நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலை தாக்குதல்களை அடுத்து நீர்கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த 113பேர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

இவர்களில் 20 பேர், அண்மையில் வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு முகாமிற்கு சுயவிருப்பின் காரணமாக சென்றுள்ளனர். தற்போது 15பேர் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்து நீர்கொழும்பிற்கு தமது சுயவிருப்பில் செல்ல விரும்பம் தெரிவித்துள்ளனர்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று முந்தினம் ஐவரும், நேற்று இரவு ஒருவரும் நீர்கொழும்பு சென்றுள்ளனர். மேலும் 9பேர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களுக்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லையெனவும் தற்போது 87பேர் குறித்த முகாமில் இருப்பதாகவும் புனர்வாழ்வு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!