வறட்சியின் கொடூரம்: தண்ணீர் திருடினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

குஜராத் மாநிலத்தில் தண்ணீரைத் திருடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அம்மாநில சட்டசபையில் நேற்று, இரு மசோதாக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த மசோதாக்களின் படி விவசாயத்திற்கான நீரைத் திருடினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் ஒன்றரை ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும் என்ற விதி மாற்றப்பட்டு, 2 லட்சம் ரூபாய் அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!