தனியார் பள்ளியில் மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் மாணவன் குத்தி கொலை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோல்ப் கிளப் அருகே உள்ள தனியார் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 10ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இருவரிடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த மாணவன் மற்றொரு மாணவனை கத்திரிக்கோலால் கழுத்தில் குத்தியுள்ளான்.

மேலும் அங்கிருந்த கிரிக்கெட் ஸ்டெம்பாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கபில் ராகவேந்திரா என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானான். இதையடுத்து கத்திரிக்கோலால் தாக்கிய மாணவனை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!