சர்வதேச தீவிரவாதி பின்லேடன் மகன் ஹம்சா கொல்லப்பட்டதாக தகவல்!

கொல்லப்பட்ட சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளில் சிக்கி ஹம்சா உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு பின்லேடன் கொல்லப்பட்ட பின் மேற்கத்திய நாடுகளுக்கு ஹம்சா பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் அல்கொய்தா அமைப்பில் வளர்ந்து வரும் தலைவராக இருந்த ஹம்சா பற்றி தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!