இந்­தோ­னே­சி­யாவில் 22 வயது யுவதி உட்­பட மூவ­ருக்கு தலா 100 பிரம்­ப­டி தண்­டனை

இந்­தோ­னே­சிய ஏக் மாகா­ணத்தில் திரு­ம­ணத்­துக்கு முன்­ன­ரான காதல் தொடர்பை வைத்­தி­ருந்­த­தாக குற்­றச்­சாட்­டுக்­குள்­ளான 22 வயது யுவ­தி­யொ­ருவர் உட்­பட மூவ­ருக்கு பொது இடத்தில் பிரம்பால் அடித்து நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

மேற்­படி யுவதிக்கும் ஏனைய இரு ஆண்­க­ளுக்கும் மாகாண தலை­நகர் பண்டா ஏக்­கி­லி­ருந்து சுமார் 170 கிலோ­மீற்றர் தொலைவில் லஹொ­சி­யு­மாவி எனும் இடத்­தி­லுள்ள மைதா­னத்தில் வைத்து தலா 100 பிரம்­ப­டிகள் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

இந்தத் தண்­டனை விதிப்­புக்­குள்­ளான ஆண்­களில் குறிப்­பிட்ட யுவ­தியின் காத­ல­ரான 22 வயது இளைஞர் மற்றும் பரா­ய­ம­டை­யாத சிறு­மி­யுடன் தகாத உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் கைது­செய்­யப்­பட்­டி­ருந்த 19 வயது இளைஞன் ஆகியோர் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

பிரம்­படி தண்­டனை நிறை­வேற்­றப்­பட்டபோது அந்த யுவதி வேதனை தாங்­காது கதறி அழு­துள்ளார். இந்த தண்­டனை நிறை­வேற்­றத்தை பெரு­ம­ள­வான பொது­மக்கள் கூடி­யி­ருந்து அவ­தா­னித்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

ஆனால் இந்தத் தண்­டனை நிறை­வேற்­றத்தைப் பார்க்க சிறு­வர்­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை என பிராந்­திய அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

மேற்­படி தண்­டனை நிறைவேற்றத்தையடுத்து யுவ­திக்கும் அவ­ரது காத­ல­ருக்கும் வீடு செல்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டது.

ஆனால் 19 வயது இளைஞன் பிரம்­படித் தண்­டனை நிறை­வேற்­றத்­தை­ய­டுத்து 5 வருட சிறைத்­தண்­ட­னையை அனுபவிக்கும் முகமாக சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இதன்போது அவனது வெள்ளை நிற மேலாடை குருதியால் நனைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!