வெள்ளவத்தையில் நள்ளிரவு பதற்றம்- மோதல்களில் 6 பேர் காயம்!

கொழும்பு – வெள்ளவத்தை மயூரைா பிளேஸ் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மோதல்களில், பொலிசார் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூன்று பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு வெள்ளவத்தை மயூரா பிளேஸ் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதன் போது, அருகில் உள்ள கட்டடங்களின் யன்னல் கண்ணாடிகள் கல்வீச்சில் சேதமடைந்தன. முச்சக்கர வண்டிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டன.

இதையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!