மைத்திரி- மகிந்த இன்று சந்திப்பு?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இன்று காலை கொழும்பில் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியல் கூட்டணி தொடர்பிலும், ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாகவும் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் கூட்டணி அமைக்கும் முயற்சி இழுபறியில் இருந்துவருகின்றது. அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்திலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!