“கட்சியின் உறுப்பினர்களை சஜித்துக்கு எதிராக திசை திருப்பி கருவை களமிறக்கும் சாத்தியம்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கமாட்டார் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை சஜித்துக்கு எதிராக திசை திருப்பி விட்டு கரு ஜயசூரியவை களமிறக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிட்டு ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்ளாது. இன்று யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற தீர்மானத்தில் கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!