இன்று கம்போடியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் பயணமாக இன்று கம்போடியாவுக்குச் செல்லவுள்ளார். அவர் இன்று நொம்பென்னை வந்தடைவார் என, கம்போடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கம்போடிய மன்னர் நொரொடோம் சிகாமணியின் அழைப்பின் பேரில் நொம்பென்னுக்கு வரும் சிறிலங்கா அதிபருக்கு, மன்னரின் அரச மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படும்.

கம்போடிய பிரதமர் ஹூன் சென்னுடன் இருதரப்பு பேச்சுக்களையும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடத்தவுள்ளார்.

சிறிலங்கா அதிபரும் அவரது குழுவினரும் இந்தப் பயணத்தின் போது, அங்கோர் புராதன பூங்காவி்ல் உள்ள பௌத்த ஆலயங்களுக்கும் செல்லவுள்ளனர்.

சிறிலங்கா அதிபரை வரவேற்கும் பதாதைகள் நொம்பென்னில் வைக்கப்பட்டிருக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!