முல்லைத்தீவு – அம்பகாமம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் மீது இராணுவத்தினர் நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவ இடத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அம்பகாமம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!