செப்டெம்பர் 3 இல் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்போம் -மஹிந்த அமரவீர

சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள், தேர்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் செப்டெம்பர் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கட்சி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

செப்டெம்பர் 2 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த சுதந்திர கட்சியின் மாநாடு 3 ஆம் திகதி நடத்தப்படும். சுகததாச உள்ளக அரங்கில் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இந்த மாநாடு நடைபெறும். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொள்வார்கள்.

மாநாடு நிறைவடைந்ததன் பின்னர் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. மாவட்ட கூட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் , தொகுதி கூட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் தலைமையிலும் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!