அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதாக கோத்தா அறிவிக்கவில்லை

அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச, இதுவரை தனது அமைச்சுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என, உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் வஜித அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பான மேலதிக விபரங்களை தாம் ஆராய்வதாகவும், அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!