முள்ளிவாய்க்காலில் இருந்து திரும்பியவர்களுக்கு மென்பானம் கொடுத்த இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று விட்டுத் திரும்பிய மக்களுக்கு இராணுவத்தினர் மென்பானங்களை வழங்கினர். புதுக்குடியிருப்பு- மந்துவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமில், வாகனங்களில் வந்தவர்களை மறித்து படையினர் மென்பானங்களை வழங்கினர். அத்துடன், ஒளிப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!