சீனாவில் கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி

சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதி அருகே கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலியாகினர். மேலும் இருவரை காணவில்லை.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருந்த வந்த கப்பல் ஒன்று, இயற்கை சீற்றம் காரணமாக நேற்று மாலை 6 மணியளவில் ரிசாவோ நகர துறைமுகம் அருகே கடலில் மூழ்கியது. தகவல் அறிந்து மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து மீட்புப்படை அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இவ்விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் இருவரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது, இந்த விபத்து நிகழ்ந்த போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் காற்று வீசியது’, என தெரிவித்தனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!