பட்டியலில் பெயர் இருக்கின்றதா? இல்லையா?என்பது குறித்து யாரும் கவலையடைய வேண்டாம். கோத்தபாய ராஜபக் ஷ போட்டியிட தகுதியானவரா? இல்லையா? என்பதனை வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் ஆணையாளர் தீர்மானிக்கட்டும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக் ஷவின் பெயர் அமெரிக்காவின் மார்ச் முதல் ஜூன் மாத காலப்பகுதிக்கான விலக்களிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் வின வியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில் அமெரிக்காவின் மார்ச் முதல் ஜூன் மாத காலப்பகுதிக்கான விலக்களிப்பு பட்டியலில் கோத்தபாயவின் பெயர் இருக்கின்றதா? இல்லையா என்பது குறித்து யாரும் கவலையடைவேண்டியதில்லை.
ஒரு விடயத்தை நான் குறிப்பிடுகின்றேன். நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை பிரஜையா இல்லையா? என்பதனை தேர்தல்கள் ஆணையாளர் தீர்மானிக்கப்பட்டும். அதற்கு என்று ஒரு சட்ட முறைமை உள்ளது. அதற்கேற்ப நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிட தகுதியானவரா? இல்லையா? என்பதனை வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் ஆணையாளர் தீர்மானிக்கட்டும் என்பதனை நாங்கள் தெ ளிவாக குறிப்பிடுகின்றோம்.
அதேவேளை அமெரிக்காவின் மார்ச் முதல் ஜூன் மாத காலப்பகுதிக்கான விலக்களிப்பு பட்டியலில் கோத்தபாயவின் பெயர் இருக்கின்றதா? இல்லையா கவலைப்படுகின்றவர்கள் ஒரு வேலையை செய்யலாம். அதாவது கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துடன் தொடர்புகொண்டு இந்த விடயம் குறித்து வினவலாமே? அதனை செய்யமாட்டார்கள். அதனை செய்தால் உண்மை வெ ளியே வந்துவிடும் என்று தெரியும். எனவே அந்த செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு கோருகின்றேன் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!