கோத்தா விவகாரம்: ஆணையாளர் தீர்மானிக்கட்டும் – கெஹெலிய

பட்­டி­யலில் பெயர் இருக்­கின்­றதா? இல்­லையா?என்­பது குறித்து யாரும் கவ­லை­ய­டை­ய­ வேண்டாம். கோத்­த­பாய ராஜ­பக் ஷ போட்­டி­யிட தகு­தி­யா­ன­வரா? இல்­லையா? என்­ப­தனை வேட்பு மனு தாக்­க­லின்­போது தேர்தல் ஆணை­யாளர் தீர்­மா­னிக்­கட்டும் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் பெயர் அமெ­ரிக்­காவின் மார்ச் முதல் ஜூன் மாத காலப்­ப­கு­திக்­கான விலக்­க­ளிப்பு பட்­டி­யலில் இடம்­பெ­ற­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்பில் வின வி­ய­போதே அவர் இதனை குறிப்­பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில் அமெ­ரிக்­காவின் மார்ச் முதல் ஜூன் மாத காலப்­ப­கு­திக்­கான விலக்­க­ளிப்பு பட்­டி­யலில் கோத்­த­பா­யவின் பெயர் இருக்­கின்­றதா? இல்­லையா என்­பது குறித்து யாரும் கவ­லை­ய­டை­வேண்­டி­ய­தில்லை.

ஒரு விட­யத்தை நான் குறிப்­பி­டு­கின்றேன். நாங்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்பு மனு தாக்கல் செய்­யும்­போது கோத்­த­பாய ராஜ­பக்ஷ இலங்கை பிர­ஜையா இல்­லையா? என்­ப­தனை தேர்­தல்கள் ஆணை­யாளர் தீர்­மா­னிக்­கப்­பட்டும். அதற்கு என்று ஒரு சட்ட முறைமை உள்­ளது. அதற்­கேற்ப நாங்கள் நட­வ­டிக்கை எடுப்போம். கோத்­த­பாய ராஜ­பக்ஷ போட்­டி­யிட தகு­தி­யா­ன­வரா? இல்­லையா? என்­ப­தனை வேட்பு மனு தாக்­க­லின்­போது தேர்தல் ஆணை­யாளர் தீர்­மா­னிக்­கட்டும் என்­ப­தனை நாங்கள் தெ ளிவாக குறிப்­பி­டு­கின்றோம்.

அதே­வேளை அமெ­ரிக்­காவின் மார்ச் முதல் ஜூன் மாத காலப்­ப­கு­திக்­கான விலக்­க­ளிப்பு பட்­டி­யலில் கோத்­த­பா­யவின் பெயர் இருக்­கின்­றதா? இல்­லையா கவ­லைப்­ப­டு­கின்­ற­வர்கள் ஒரு வேலையை செய்­யலாம். அதா­வது கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூதரகத்துடன் தொடர்புகொண்டு இந்த விடயம் குறித்து வினவலாமே? அதனை செய்யமாட்டார்கள். அதனை செய்தால் உண்மை வெ ளியே வந்துவிடும் என்று தெரியும். எனவே அந்த செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு கோருகின்றேன் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!