லாவோஸில் பஸ் பள்ளத்தில் குடைசாய்ந்ததில் 13 சுற்றுலா பயணிகள் பலி

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று லாவோஸில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரழந்துள்ளார்கள்.

சீனாவை சேர்ந்த ஒரு சுற்றுலா குழு லாவோஸ் நாட்டுக்கு சென்றது. அவர்கள் நேற்று முன்தினம் மாலை லாவோஸின் தலைநகர் வியன்டியனில் இருந்து லுவாங் பிரபாங் நகருக்கு பஸ்சில் புறப்பட்டனர்.

சுற்றுலா உதவியாளர் ஒருவர் உள்பட சீனாவை சேர்ந்த 43 பேரும், லாவோஸ் நாட்டை சேர்ந்த சாரதி மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகியோரும் பஸ்சில் பயணித்தனர்.

லுவாங் பிரபாங் நகருக்கு அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது ஓடிய பஸ், வீதியை விட்டு விலகி வீதியில் இருந்து சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதையடுத்து, பொலிஸாரை் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

பஸ்சில் ‘பிரேக்’ திடீரென செயலிழந்ததால் விபத்து நேரிட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!