அமைச்சர் ரவி கருணாநாயக்கவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இன்றிலிருந்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் விசாரணைகளுக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், தவறான ஆதாரங்களை வழங்கியமை தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதற்காகவே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!