அடுத்த கட்டம் குறித்து இன்று முடிவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்றிரவு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்துரையாடவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தை அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவது குறித்த அடுத்த மக்கள் கூட்டம் எதிர்வரும் 5ம் திகதி குருநாகலையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காகவே இந்த சந்திப்பு இன்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, அமைச்சர் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தும் கடிதம் ஒன்றில், ஐக்கிய தேசிய கட்சி எம்.பிகள் இந்தச் சந்திப்பில் கைச்சாத்திடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!