பரந்துப்பட்ட கூட்டணியூடாக பலமாக அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும் – மஹிந்த

பரந்துப்பட்ட கூட்டணியின் ஊடாக பலமாக அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு – முகத்துவாரத்தில் அமைந்துள்ள இலங்கை முக்குலத்தோர் கலாச்சார மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணி விவகாரம் வெற்றிப் பெறும் தருவாயில் காணப்படுகின்றது. கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்று சுதந்திர கட்சில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றார்கள்.

பரந்துப்பட்ட கூட்டணி தோல்வியடைந்து சுதந்தர கட்சி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் குறுகிய தரப்பினர் சுதந்திர கட்சிக்குள் செயற்படுகின்றார்கள். எவ்வாறு இருப்பினும் பரந்துப்பட்ட கூட்டணியின் ஊடாக பலமான அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் இதன்போது அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!