அரசியல் கட்சிகளுடன் பேரம்பேசி தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்கிறது ஜே.வி.பி

தமிழ அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விடவும் தமிழ் மக்களுடன் நேராடியாக பேசி இணக்கம் காணவே நாம் விரும்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை அவர்களினூடாக கேட்டறிந்து அதற்கான தீர்வை சிந்திக்க வேண்டும். மாறாக பேரம்பேசி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்றே நாம் நம்புகின்றோம்.

ஆகவே வெகு விரைவில் வடக்கு கிழக்கில் எமது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நாம் இத்தனை காலமாக செய்த அரசியலுக்கு அப்பால் தேசிய அரசியல் கொள்கையில் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இதில் பாகுபாடு இல்லாத அரசியல் நகர்வுகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். பிரதான தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்க முன்னர் மக்கள் பிரச்சினைகளை அறிந்துகொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே ஆரோக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!