சந்திரிகா வந்தார் – ஐதேக இல்லை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி பங்கேற்கவில்லை என சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, பிவித்துரு ஹெல உறுமய, பிவித்துரு ஹெல உறுமய, மஹஜன எக்சத் பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, சமசமாஜ கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

அதேவேளை இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் பங்கேற்றிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!