உலகில் முதல் முறையாக மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு 117 நாட்களின் பின் பிறந்த குழந்தை

உலகில் முதல் முறையாக மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிப்பெண்ணுக்கு 117 நாட்களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது.

செக் குடியரஸ் நாட்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பர்னோ (BRNO) பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவர்கள் அவரது கருவில் வளரும் குழந்தையை காப்பாற்ற முடிவெடுத்தனர் .

உடனடியாக உயிர் காக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்டு அந்தப் பெண்ணுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. உணர்வற்ற தாயின் உடல்நிலையையும், அவரது கருப்பையில் உருவாகி வந்த உயிரின் வளர்ச்சியையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர் மருத்துவர்கள். கருவின் வளர்ச்சி முறையாக நடைபெற கருவிகளின் உதவியுடன் மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 15 அன்று மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி இந்த உலகில் கால் பதித்தாள் குழந்தை எலிஸ்கா. அன்று குழந்தை பிறந்த மகிழ்ச்சியோடு எலிஸ்காவின் தாய் மறையும் துயரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை அந்த குடும்பத்துக்கு ஏற்பட்டது. எலிஸ்கா பிறந்த அடுத்த சில மணி நேரங்களில் உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாக கருவைச் சுமந்த பெண் உயிரிழந்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!