சஜித்துக்கு 50 எம்.பிக்கள் ஆதரவு!

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாளை கையளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக மக்களை அணித் திரட்டும் மக்கள் பேரணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. மூன்றாவது மக்கள் பேரணி இன்று குருணாகலையில் இடம்பெறவிருக்கிறது. இந்நிலையில் நாளை சஜித்தை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை கடிதமொன்றை பிரதமரிடம் கையளிக்கவுள்ளோம்.

தற்போது 50 க்கு அதிகமான உறுப்பினர்கள் அந்த கோரிக்கை கடிதத்தில் கைசாத்திட்டுள்ளனர். எவ்வாறாயினும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிடுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!