மீண்டும் தலையெடுத்த வாள்வெட்டுக்குழு!

யாழ்ப்பாணம்- கோண்டாவில், அன்னங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று இரவு 9.00 மணி அளவில் நுழைந்த மர்ம கும்பல், வாகனங்களையும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

கோண்டாவில், அன்னங்கை பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டிற்கு இரு மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேர் கொண்ட குழுவினர் முகங்களை மூடியவாறு வந்துள்ளனர். அவர்கள் வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கியதுடன் அங்கு தரித்து நின்ற முச்சக்கர வண்டியையும் அடித்து நொறுக்கிவிட்டு வீட்டில் இருந்தவர்களை வாள்களை காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

வீட்டுக்கரரின் அவலக் குரல் கேட்டு அப்பகுதி இளைஞர்கள் குறித்த மர்மக் கும்பலை துரத்திய போதும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!