முன்னாள் சிம்பாப்வே ஜனாதிபதி ரொபட் முகாபே காலமானார்!

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாகவிருந்த ரொபட் முகாமே தனது 95 ஆவது வயதில் காலமானார்.

உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ஆப்பிரிக்க நாடான சிம்பாப்வே கடந்த 1980-ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. இதையடுத்து, 1980 முதல் 1987 வரையில் ரொபட் முகாபே பிரதமராக பதவி வகித்தார்.

பின்னர் 1987 முதல் அதிபராக பதவி வகித்து வந்தார். உலகிலேயே மிகவும் வயதான ஆட்சியாளராக முகாபே விளங்கினார்.

இந்த நிலையில் சிம்பாப்வேவில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதன்மூலம் முகாபேயின் 37 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

முகாபேவை ஆட்சியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான ஜனு பி.எப். கட்சி வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து சிம்பாப்வேவின் ஜனாதிபதியாக எம்மர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!